Total Pageviews

Saturday 17 August 2013

யாரந்த நாலு பேர்....!


உங்களில் யார் அந்த நாலு பேர்...?

என் அண்ணனா....

உன் தம்பியா...

அடுத்த வீட்டு அன்பழகனா...

எதிர் வீட்டு ஏகாம்பரமா...

வரப்பு தகராறில்

முச்சந்தியில் முகத்தில் உமிழ்ந்து கொண்ட

மேலத்தெரு மொக்க ராசுவா...

காதலித்து கைவிட்ட

முத்துலட்சுமியின் புருஷன் முருகேசனா...

பார்த்து கொண்டாலும் 

முகத்தை முறித்து போகும்

தங்கை காமாட்சி புருஷன் பொன்னுச்சாமியா..

சென்னை பட்டினத்தை

சொந்த ஊராக்கி கொண்ட

சின்னத்தம்பி பால் பாண்டியா...

தன் பிணத்தை 

தானே சுமக்கும் அவல நிலை

என்றைக்கும் வராது..

செத்த பிறகு நான் சொல்லும் நன்றி 

உங்களுக்கு வந்து சேராது...

எனவே இப்போதே சொல்ல வேண்டும் 

நன்றி....

யாரந்த நாலு பேர்....!



(17-08-2013 இன்றைய தினமலர்- பெண்கள் மலரில் வெளியானது)


2 comments:

  1. அந்த நாலு பேரும் அன்று தான் பிறக்கிறார்கள் ......................

    ReplyDelete
  2. தீரா கேள்விகள் ... தீ பற்றி எரியும் கேள்விகள் ...

    ReplyDelete