Total Pageviews

Saturday 17 August 2013

சொன்னது நீதானா?



 
“ஹேய் மஞ்சு... நேத்து மட்டும் என்ன செலவு தெரியுமா? கஸானா மல்லி மொக்கு சங்கிலியிலேயிருந்து கடைத்தெரு மல்லிகைப்பூ வரைக்கும் ஆன செலவு லட்சத்து அறுபதாயிரம் , நகையை வாங்கி போட்டுக்கிற வரைக்கும்” நீங்க என்ன சொன்னாலும் கேக்கிறேன்னு...ன்னு சொல்லிட்டு இப்ப என் அண்ணன் மக நிச்சயதார்த்துக்கு வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறியே... நியாயமா மஞ்சு” என்று கேட்டுக் கொண்டு இருந்தான் சந்துரு.

டிரஸ்ஸிங் டேபிள் முன் உட்கார்ந்து கொண்டு மல்லி மொக்கு சங்கிலியை கழுத்தில் தவழ விட்டு அழகு பார்த்து கொண்டிருந்த மஞ்சு காதல் ததும்பிய கண்களை ஒரு தரம் மூடி திறந்து, லிப் க்ளாஸ் பொருந்திய ஆரஞ்சு உதடுகளைப் லேசாக பிரித்து கூலாக சொன்னாள்...

  நீங்க என்ன சொன்னாலும் கேக்கிறேன்’ன்னுதானே சொன்னேன்...?”

(26-06-2013 குமுதம் இதழில் வெளிவந்தது)

2 comments:

  1. காதால் கேட்க கண்ணில் ஏன் காதல் ததும்பணும்? ஒருக்கால் ஒரு கால் குறையுதேன்னோ ?

    ReplyDelete